ஜாதிக் கட்சிகள் அழிவு சக்திகள் .. ஜெயேந்திரர்
சென்னை:
ஜாதிக் கட்சிகள் அவற்றை உருவாக்கியவர்களையே அழித்து விடும் என காஞ்சிசங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எச்சரிததுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அவர் அளித்த பேட்டி:
பசு வதை தடை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்குவலியுறுத்தியுள்ளோம். மேலும் பசுவிடமிருந்து கிடைக்கும் இன்றியமையாதபொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு முகாமை வரும் நவம்பர் மாதம் 20, 21 ஆகியதேதிகளில் காஞ்சிபுரத்தில் நடத்த உள்ளோம்.
பசுவதை எதிர்ப்பிற்காக மாவட்டம்தோறும் கமிட்டிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன.
அரசியலில் சாதியக் கட்சிகள் தற்போது வளர்ந்து வருவது நாட்டிற்கு ஆபத்தானது.மேலும் இந்த சாதிக் கட்சிகள் உருவாக்கியவர்களையே அழித்துவிடும். சாதிக் கட்சிகள்தேர்தலுக்குப் பின்னர் தெரியாமல் போய் விடும்.
இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்களே. இங்குள்ளவர்கள் மதத்தால்வேறுபட்டிருந்தாலும் அனைவரும் இந்தியரே.எனவே மக்களை மதத்தின் பெயரால்யாரும் பிரிக்கக் கூடாது.
அமெரிக்கா 350 ஆண்டுகளுக்கு முன்னால் உருவான நாடு. அங்கு அனைத்துமதத்தினரையும் அரவணைத்து செல்வதால் அந்த நாடு முன்னேறியுள்ளது. அதே போல்நமது நாடும் முன்னேற வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்றார் ஜெயேந்திரர்.