பயணிகளைக் கண்காணிக்க வீடியோ காமராக்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை ரயில் நிலைய பிளாட்பாரங்களில் சமூக விரோதக் கும்பல்களைக் கண்காணிக்க வீடியோ கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. திங்கள்கிழமைமுதல் இவை செயல்படத் தொடங்கின.
ஏற்கனவே விருதுநகர், ஜோலார்பேட்டை மற்றும் சென்னை மத்திய ரயில் நிலைய பிளாட்பாரங்களில் கண்காணிப்பு வீடியோ கேமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளன.
மதுரை ரயில் நிலைய பிளாட்பாரத்தில், வீடியோ கேமிராக்களை சட்டசபை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அவர்பேசுகையில் அடுத்த ஒரு மாதத்தில், மதுரையில், 3 ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கும் என்றார்.
மதுரை மேயர் குழந்தைவேலு, கலெக்டர் தங்கவேலு, எம்.பி.க்கள் அக்னிராஜ், மோகன், எம்.எல்.ஏ. தெய்வநாயகம், டிஐஜி ஜாங்கிட் மற்றும் நகரபோலீஸ் கமிஷனர் சுப்ரமணியம் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications