இந்தியாவும், இன்டர்நெட்டும்
சிங்கப்பூர்:
இன்டர்நெட் உபயோகம் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் வளரும் நாடுகளின்கையே, குறிப்பாக இந்தியாவின் ஆதிக்கமே எதிர்காலத்தில் ஓங்கியிருக்கும் என்றுசிங்கப்பூரைச் சேர்ந்த ஆய்வு நிறுவன இயக்குநர் நிக்கோலஸ் நெக்ரோபோன்டேகூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து அலை, அலையாக வெளியேறும் சாப்ட்வேர் என்ஜீனியர்களின்தொழில்நுட்ப அறிவுக்கு மேலை நாடுகள் எதிர்காலத்தில் ஈடு கொடுக்க முடியாதுஎன்றும் அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசுகையில், பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த ஒருவர் காதல் வைரஸை உலகெங்கும் பரப்பினார். பெரும் பீதியைக் கிளப்பியஅந்த வைரஸை தடுக்க மேலை நாடுகள் திணறின. இதெல்லாம், எதிர்காலத்தில்இன்டர்நெட்டில் ஆசிய நாடுகளின் ஆதிக்கமே அதிகம் இருக்கும் என்பதைக்காட்டுகிறது.
இன்டர்நெட் எதிர்காலம், வளரும் நாடுகளின் கையில்தான் உள்ளது. இந்தியா, சீனாஆகிய நாடுகள், பிற ஆசிய நாடுகளை விட அதிக அளவில் இன்டர்நெட்டில் ஆதிக்கம்செலுத்தும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பெங்களூரில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களை இந்திய அரசுஉறுதியாக ஆதரித்து வருகிறது. இதன் மூலம் சீனாவை விட அதிக வாய்ப்புகள்இந்தியாவுக்கு உள்ளது. இன்டர்நெட்டின் சக்தியை சீனா இன்னும் குறைத்தேமதிப்பிட்டு வருகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications