மலேசியா, நேபாளம், யு.ஏ.இ. கிரிக்கெட் அணிகளுக்கு ஒரு நாள் அந்தஸ்து
ஷார்ஜா:
ஐக்கிய அரபு எமிரேட், மலேசியா மறறும் நேபாளம் ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதி வழங்கப்படவுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இயக்குநர் அனில் கலவேர் இத்தகவலைத் தெரிவித்துள்ார்.ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஷார்ஜாவில் நடத்தப்படவுள்ள பெப்சி கோப்பைக்கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட ஷார்ஜா வந்த அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத 8 நாடுகளின் அணிகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றன. ஷார்ஜா மற்றும் துபாயில் இந்தப் போட்டிகள் நடைபெறும். புதன்கிழமைபோட்டிகள் தொடங்குகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட், மலேசியா, நேபாளம் ஆகிய அணிகளுக்கு ஒரு நாள் கிரிக்கெட்விளையாடும் அணிகள் என்ற தகுதி விரைவில் வழங்கப்படும். படிப்படியாக இவற்றிற்குடெஸ்ட் அந்தஸ்து அளிக்கப்படும்.
டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளாத கிரிக்கெட் விளையாடும் நாடுகளி கிரிக்கெட்டைபிரபலப்படுத்தும் பணி, இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஷார்ஜாவில் நடைபெறவுள்ள பெப்சி கோப்பைத் தொடரில், மலேசியா, சிங்கப்பூர்,குவைத், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட், ஜப்பான், நேபாளம், மாலத்தீவுகள் ஆகியஅணிகள் கலந்து கொள்கின்றன.
ஷார்ஜாவில் புதன்கிழமை துவங்கும் இப்போட்டித் தொடரின் முதல் போட்டியில்,மலேசியாவும், ஹாங்காங்கும் மோதுகின்றன. அன்றே மேலும் இரு போட்டிகள்நடைபெறும். சிங்கப்பூர், குவைத் இடையே ஒரு போட்டியும், ஐக்கிய அரபு எமிரேட்,நேபாளம் இடையே மற்றொரு போட்டியும் துபாயில் நடக்கிறது.
நவம்பர் 24-ம் தேதி ஷார்ஜாவில் இறுதிப் போட்டி நடக்கிறது.
யு.என்.ஐ.