For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கைக்கு சுகன்யா வை அனுப்புகிறது இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க இந்தியாவிடமிருந்து "சுகன்யாஎன்ற கடலோர பாதுகாப்பு கப்பலையும், "சேடக் என்ற ஹெலிகாப்டரையும் இலங்கைவாங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாக ஆயுதங்களைகடத்துவதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கவும், இலங்கை கடற்பகுதிகளில்விடுதலைப் புலிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்கவும்இந்தியாவிடமிருந்து சுகன்யாவையும், சேடக் கையும் இலங்கை வாங்கியுள்ளது.

இவற்றை இயக்குவது குறித்த பயிற்சியை இந்திய கடற்படை வீரர்கள் இலங்கைகடற்படை வீரர்களுக்கு அளிப்பார்கள். இந்த கப்பலையும், ஹெலிகாப்டரையும்வாங்குவது குறித்த ஒப்பந்தம் இரு நாட்டு கடற்படை அதிகாரிகளிடையேகையெழுத்தானது.

இது பற்றி இலங்கை கடற்படை அதிகாரிகள் கூறுகையில், இலங்கை கடற்படை தளபதிசிசில் திசோரா சில நாட்களுக்கு முன்பு இந்தியா சென்றிருந்த போதுஇந்தியாவிடமிருந்து கடற்படை கப்பலையும், நவீனரக ஹெலிகாப்டரையும் வாங்கமுடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் விடுதலைப்புலிகள் ஆயுதம் கடத்துவதை தடுக்க முடியும். அவர்கள்நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இவற்றை இயக்குவது குறித்துஇந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி அளிப்பார்கள்என கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X