For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரமணியுடன் ஜெ. சேருவதா .. சீறுகிறார் சுவாமி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியுடன், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூட்டணி வைத்திருப்பதை தமிழக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம்சுவாமி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சுப்ரமணியம் சுவாமி வெளியிட்ட அறிக்கை:

தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், புலிகள் ஆதரவாளர். அதனால் அவர், ராஜ்குமாரை மீட்பதற்கு தூதராகப் போகக் கூடாதுஎன்று ஜெயலலிதா கூறினார். இதற்கு அவர், முதல்வர் கருணாநிதியிடம் பதில் கூறியே தீர வேண்டும்.

தற்போது அவர், திராவிடர் கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் புலிகள் ஆதரவாளரே. ராஜீவ் காந்திபடுகொலை தொடர்பாக ஜெயின் கமிஷன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. அதில் வீரமணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புஇருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இதுபோல் தேச விரோதக் கட்சியுன் தொடர்பு வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் சுப்ரமணிசாமி.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X