கணவனுக்கு அடி, உதை .. மனைவி கற்பழிப்பு
செங்கல்பட்டு:
கணவனை அடித்து விட்டு அவர் கண் முன்பாகவே, மனைவியை கற்பழித்த 5 பேர்கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அருகே உள்ள காட்டாங்குளத்தூர் தைலாபுரத்தைச் சேர்ந்தவர் மணி.இவரது மனைவி வளர்மதி. இவர்கள் இருவரும் காட்டாங்குளத்தில் இருக்கும்திரையரங்கில் இரவு காட்சி சினிமா பார்க்க சென்று கொண்டிருந்த போது 5 பேர்வளர்மதியை கேலி செய்தனர். இவர்களை மணி கண்டித்தார். அந்த கும்பவைச்சேர்ந்தவர்கள் மணியை மிரட்டிவிட்டு சென்றனர்.
சினிமா முடிந்து திரும்பி வந்த மணியையும், வளர்மதியையும் வழிமறித்த அதே 5 பேர்கொண்ட கும்பல் மணியை அடித்துவிட்டு வளர்மதியை அருகிலிருந்த ஏரிக்கரைக்குதூக்கிச் சென்று கற்பழித்தது. இதில் வளர்மதி மயக்கமடைந்தார். இதையடுத்து பயந்துபோன கும்பல் அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியது.
இச் சம்பவம் குறித்து மணி மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸார் விரைந்து சென்று கற்பழித்த 5 பேரையும் கைது செய்தனர்.