For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜார்கண்ட் பிறந்தது, முதல்வரானார் மாரண்டி

By Staff
Google Oneindia Tamil News

ராஞ்சி:

ஜார்க்ண்ட் மாநிலம் பிறந்தது, புதிய முதல்வராக பா.ஜ.க.வின் பாபு லால் மாரண்டி பதவியேற்றார், அவர் 15நாட்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க புதிய ஆளுநர் பிரபாத் குமார் உத்தரவிட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இது இந்தியாவின் 28-வதுமாநிலமாகும். முதலில் ஆளுநராக பிரபாத் குமார் பதவியேற்றார். அதற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் புதியமுதல்வராக மாரண்டி பதவியேற்றார்.

முன்னதாக, திங்கள்கிழமை பா.ஜ.க. சட்டசபைக் கட்சித் தலைவராக மாரண்டி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்துஆட்சி அமைக்க உரிமை கோரினார். தனக்கு 43 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக மாரண்டிதெரிவித்திருந்தார். சட்டசபையின் மொத்த பலம் 81 ஆகும்.

இதையடுத்து மாரண்டியை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் பிரபாத் குமார் அழைப்பு விடுத்தார். பதவியேற்புக்குப்பின் 15 நாட்களில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் மாரண்டிக்கு ஆளுநர்உத்தரவிட்டார்.

முதல்வர் பதவியைக் கைப்பற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் கடுமையாக முயற்சி செய்தார்.காங்கிரஸ் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். ஆனால் சோரனை முதல்வராக ஏற்க முடியாதுஎன்று காங்கிரஸ் கூறி விட்டதால், அவரது முயற்சி தோல்வியுற்றது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X