For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சின்னப் பூக்களை மகிழ்வித்த ஜெட் ஏர்வேஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குழந்தைகள் தினத்தை ஒட்டி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 90 ஏழைக் குழந்தைகளைஇலவசமாக விமானத்தில் ஏற்றிச் சென்று மகிழ்வித்தது.

குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் விதமாக ஏழை பெண் குழந்தைகளை இலவசமாகவிமானத்தில் ஏற்றிச் சென்று மகிழ்விக்க முடிவு செய்தது.

அதன்படி செவ்வாய் கிழமை அன்புக் கரங்கள், யுனிவர்சல் அறக்கட்டளையைச் சேர்ந்தஅனாதை பெண் குழந்தைகள், மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகள் உட்பட 90 பெண்குழந்தைகள் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஏற்றிச் சென்றது.

இந்த விமானம் செவ்வாய கிழமை மதியம் 2.40-க்கு சென்னையிலிருந்து கிளம்பிமாலை 3.45 வரை விண்ணில் பறந்தது. குழந்தைகளுடன் மத்திய அமைச்சர் வசுந்தராராஜு சிந்தியா, நடிகை பானுப்ரியா உட்பட 134 பேர் பயணம் செய்தனர்.

விமானம் திருப்பதி, காஞ்சிபுரம், சிதம்பரம், பாண்டிச்சேரி வரை வானில் பறந்தது.குழந்தைகள் விண்ணிலிருந்து மண்ணைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

பயணத்தின் போது வசுந்த ராஜூ சிந்தியாவும், பானுப்ரியாவும் குழந்தைகளை பேசிமகிழ்வித்தனர். பானுப்ரியாவுடன் குழந்தைகள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X