புலிகள் மீது குண்டுவீச்சு
கொழும்பு:
விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண நார்வே தூதுக்குழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நார்வே தூதுக் குழுவினர் இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சமரச முயற்சி காரணமாக கடந்த ஒரு வார காலமாக இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பெரிய அளவில் மோதல்நடைபெறவில்லை.
இந்த நிலையில் புலிகளின் மீதான தாக்குதலை, இலங்கை ராணுவம் திங்கள்கிழமை முதல் தீவிரப்படுத்தியுள்ளது.
பலாய் பகுதியில் உள்ள புலிகளின் மறைவிடங்கள், முகாம்கள் மீது இலங்கை விமானப்படை வீரர்கள் குண்டு வீசித் தாக்கினர். இஸ்ரேல் நாட்டில் இருந்துவாங்கப்பட்ட போர் விமானங்கள் இதற்குப் பயன் படுத்தப்பட்டன.
இலங்கைத் தரைப்படை வீரர்கள் கூறிய இலக்குகள் மீது குண்டு வீசப்பட்டதாகவும், சேத விவரங்கள் குறித்து இன்னம் தெரியவில்லை என்றும்விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை தென் பகுதியில் உள்ள பலாய் வரை ராணுவம் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. பலாய் பகுதியை கைப்பற்ற இலங்கை ராணுவம் கடும்சண்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.