For Daily Alerts
Just In
கள்ள நோட்டு: 3 இலங்கை வாலிபர்கள் கைது
திருச்சி:
திருச்சியில், அமெரிக்க டாலர்கள் மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுக்களை அச்சடித்த 3 இலங்கை வாலிபர்களையும், அவர்களது கூட்டாளிகள் 6 பேரையும்புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, ரூ 60 லட்சம் பெறுமானமுள்ள கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் பெயர் அரவிந்தன்(20), பாபு என்ற ஆரோக்கியநாதன் (30), ஆனந்த் (28).
தனியார் விடுதி ஒன்றில் "க்யூ பிரிவு போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் இவர்கள் சிக்கினர். கைது செய்யப்பட்ட அனைவரும் கோர்ட்டில்ஆஜர்படுத்தப்பட்டனர்.
யு.என்.ஐ
Story first published: Wednesday, November 15, 2000, 5:30 [IST]