முன்னாள் அமைச்சருக்கு 1 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்அ.ம.பரமசிவம் மற்றும் அவரது மனைவி நல்லம்மாள் ஆகியோருக்கு அதிகப்படியானசொத்துக்கள் சேர்த்த வழக்கில் தனி நீதிமன்றத்தில் தலா 1 ஆண்டு கடுங்காவல்தண்டனை விதிக்கப்பட்டது.
பரமசிவம் மீது ரூ. 38.72 அளவுக்கு வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துசேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்புவழங்கப்பட்டது. தனி நீதிபதி பி.அன்பழகன் தீர்ப்பை அறிவித்தார்.
தனது தீர்ப்பில், இருவர் மீதான புகாரும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே இருவருக்கும் தலா 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.மேலும் பரமசிவத்திற்கு ரூ. 10,000 அபராதமும், நல்லம்மாளுக்கு ரூ. 5000அபராதமும் விதிக்கப்படுகிறது என்றார்.
இந்த வழக்கில் 1997-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. 98-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி விசாரணை துவங்கியது. 62 அரசுத்தரப்பு சாட்சிகளும், 30 குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளும்விசாரிக்கப்பட்டனர்.
தனி நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள 14-வது தீர்ப்பு இது. 2 வழக்குகளில் மட்டுமேகுற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்ய ஏதுவாக டிசம்பர் 14-ம் தேதி வரைதண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி அன்பழகன் அறிவித்தார்.
யு.என்.ஐ.