பாக்கெட் சாராயம் குடித்த 2 பேர் சாவு
பழனி:
பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தைக் குடித்த 2 கூலித் தொழிலாளிகள்இறந்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், மாங்கரை அருகே உள்ள ரெட்டியார் சத்திரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (60). இவர்நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கமாக இவர் மாங்கரை அருகில் திருட்டுத்தனமாகவிற்பனை செய்து வரும் சாராயத்தை வாங்கிக் குடிப்பது வழக்கம்.
சம்பவத்தன்றும் இவர் ஒரு பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதே போல சுப்பன் (35) என்ற விவசாயக் கூலித் தொழிலாளியும் பாக்கெட் சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளார்.இவரும் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஇருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றகொட்டாரபட்டியைச் சேர்ந்த பரமன், முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications