மார்க் குறைந்தது .. மாணவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்துகொணடார்.
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் உஷா (17). 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் நடந்த பரீட்சையில்,குறைந்த மதிப்பெண்கள் பெற்றார்.
மார்க் குறைவாக வாங்கியதால், அவரது தாயார் உஷாவைக் கோபித்துக் கொண்டனர்.இதனால் மன வருத்தமடைந்த உஷா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைபலனளிக்காமல் அவர் இறந்து போனார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications