இனியாவது வீரப்பனைப் பிடியுங்கள் ..சுவாமி
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலையாகியுள்ள நிலையில், வீரப்பனைப் பிடிக்கும்முயற்சியில் உடனடியாக மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று தமிழக ஜனதாக் கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி கோரியுள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில்உடனடியாக மத்திய அரசு இறங்க வேண்டும். அதேபோல, வீரப்பனுக்கு ஆதரவுதெரிவித்த, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் தேடிப் பிடிக்க வேண்டும்.
வீரப்பனுக்கு, கர்நாடக அரசு கொடுத்த ரூ. 30 கோடி பணம் எங்கே போனது என்பதையும்மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும்.
ராஜ்குமார் விடுதலையாகியுள்ளது, சுப்ரீம் கோர்ட்டுக்குக் கிடைத்த வெற்றி. தடா கைதிகளைவிடுதலை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகுதான்,ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்துள்ளான் என்றார் சுவாமி.
ராஜ்குமார் கடத்தப்பட்டவுடன் அவரை மீட்க கமாண்டோ வீரர்களை அனுப்ப வேண்டும்என்று சுவாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications