கொண்டாட்டத்தில் ரசிகர்கள்- அச்சத்தில் தமிழர்கள்
பெங்களூர்:
ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதையடுத்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட செய்தி வெளியாகிய உடனேயே சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தை நோக்கிபெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைகளில் வெடிகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
அதே போல கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிலும் பெரும் எண்ணிக்கையிலான ராஜ்குமார் ரசிகர்கள் கூடினர்.நடிகர்களும், நடிகைகளும் அங்கு குழுமினர். நடிகை ஜெயந்தி, ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா கோவிந்துஆகியோருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
ஜெயந்தி கூறுகையில், இந்த மகிச்சியை நாம் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். யாருக்கும் எந்தப்பங்கமும் ஏற்படக் கூடாது என்றார்.
ராஜ்குமார் விடுதலைக்காக கடந்த 3 மாதங்களாக தாடி வளர்த்து வந்த அம்பரீஷ் புதன்கிழமை தாடியைஎடுத்துவிட்டு பிரஷ்ஷாக வெளியே வந்து நிருபர்களைச் சந்தித்தார்.
ராஜ்குமார் விடுதலையையடுத்து பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கலாம் என அச்சமும் நிலவிவருகிறது. இதையடுத்து நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.