த.மா.கா.வில் இணைந்த முன்னாள் நக்சல்கள்
சென்னை:
நக்சலைட் அமைப்பான தமிழ் தேச மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தஇளவரசனின் தம்பி சுபா. செல்வம் தலைமையில் 1,000 பேர் மூப்பனார்முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தமிழ்தேசிய மக்கள் விடுதலை இயக்கத்தினர் செயல்பட்டு வந்தனர். இவர்களை தீவிரவாதஅமைப்பு என போலீசார் அறிவித்திருந்தனர். ஆனால் இவர்கள் மீது போடப்பட்டவழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் சுபா.செல்வம் தலைமையில் 1,000 இளைஞர்கள் சென்னைசத்தியமூர்த்தி பவனில் மூப்பனாரை சந்தித்து அவர் முன்னிலையில் த.மா.கா.வில்இணைந்தனர்.
மூப்பனார் பேசுகையில், இந்தியா ஜனநாயக நாடாக விளங்குவதற்கு நேருவேகாரணம். நேருவின் பிறந்தநாளில்,. உங்கள் பாதையை மாற்றிக் கொண்டு ஜனநாயகபாதைக்கு வந்துள்ளதை பாராட்டுகின்றேன்
நீங்கள் அனைவரும் உங்கள் லட்சியத்திற்காக ஒரு பாதையை தேர்ந்தெடுதிருந்தீர்கள்.லட்சியங்கள் நிறைவேற பல பாதைகள் உள்ளன. சரியான பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.
சில காரியங்களுக்காக போராடும் போதும் அந்த காரியங்கள் நிறைவேறாமல் போகும்போது கோபம் ஏற்படும். அப்படி ஏற்படும் போது அந்தக் கோபம் நியாயமாகிறது.கோபத்துடன் செய்யும் செயல்கள் தீவிரவாதமாகின்றன.
தீவிரவாத பாதையை விட்டு ஜனநாயக பாதைக்கு நீங்கள் வந்துள்ளதுவரவேற்கத்தக்கது என்றார் மூப்பனார்.
சுபா. செல்வம் பேசுகையில் நாங்கள் மக்கள் அடிப்படை உரிமைக்காக போராட்டம்நடத்தி வந்தோம். எங்களை தீவிரவாதிகள் என கூறி போலீசார் குண்டர்கள் சட்டத்தில்சிறையில் அடைத்தனர். ஆனால் அவை பொய் என நிரூபிக்கப்பட்டு நாங்கள்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம்.
இப்போது மக்கள் உரிமைக்காக போராடும் த.மா.கா.வில் இணைந்துள்ளோம் என்றார்.