வால்பாறையில் வாலாட்டும் யானைகள்
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள நடுமலை எஸ்டேட்டிற்குள் புகுந்தகாட்டு யானைகள் 7 வீடுகளை இடித்து தரைமட்டமாக்கின.
வால்பாறை மலைப்பகுதியில் இருக்கும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால்அங்குள்ள காட்டு விலங்குள் உணவு மற்றும் பாதுகாப்பு இல்லாமல் அருகிலுள்ளஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
இவற்றில் யானைகள்தான் அதிகமாக ஊருக்குள் வந்து அதிக அளவில் சேதத்தைஏற்படுத்துகின்றன. யானைகள் குட்டி யானைகளுடன் சேர்ந்து ஊருக்குள் புகுந்துவீடுகளில் உள்ள வாழை மரங்களை அழித்து வீட்டையும் இடித்து விடுகின்றன.
சிறுகுன்றா, நடுமலை, குரங்குமுடி, பச்சமலை பகுதியில் இருக்கும் பலஎஸ்டேட்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் நடு இரவு நேரங்களில் புகுந்துஅட்டகாசம் செய்கின்றன. இங்குள்ள தொழிலாளர் குடியிருப்புகள் பெரும் பாதிப்புக்குஉள்ளாகி உள்ளன.
நடுமலை வடக்கு எஸ்டேட்டில் இருக்கும் 7வீடுகளை காட்டு யானைகள் திங்கள்கிழமை இடித்துத் தள்ளின. இந்த வீடுகளின் பின் புறங்களை யானைகள் இடித்ததால்வீட்டில் இருந்தவர்கள் முன்புறம் வழியாக தப்பி ஓடினர்.
நடுமலை வடக்குப் பகுதியில் திங்கள் கிழமை தேயிலை பறித்துக்கொண்டிருந்தவர்களை யானைகள் துரத்தின. காட்டு யானைகளின் அட்டகாசத்தைதடுத்து நிறுத்த வனத்துறை அதிகாரிகளும், எஸ்டேட் நிர்வாகமும் துரித நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications