வைகோ குடும்பத்தில் நானும் ஒருவன் .. கருணாநிதி
சென்னை:
சென்னை ராணி மெய்யம்மை ஹாலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகள் கண்ணகிக்கும், ஜான் புஷ்பராஜூக்கும் முதல்வர் கருணாநிதி முன்னிலையில்புதன்கிழமை திருமணம் நடந்தது.
திருமண விழாவில் பல மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பஞ்சாப்முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டு அமைச்சர் வெங்கய்யா நாயுடு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர்பிரமோத் மஹாஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் திருமண விழாவில்கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவில் வைகோ பேசுகையில், மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் உடல் நலமில்லாத நிலையிலும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதற்கு பதிலளித்தும், மணமக்களை வாழ்த்தியும் பேசிய முதல்வர் கருணாநிதி கூறுகையில், 5 ஆண்டுகள் நானும், வைகோவும், அரசியல் ரீதியாகபிரிந்திருந்தாலும் நானும், வைகோ குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் என்றார்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறுகையில், வைகோ மகளின் திருமணத்திற்கு பல்வேறு துறையைச் சேர்ந்த பலர் வந்துள்ளனர். நட்பு விஷயத்தில் வைகோமிகப் பெரிய பணக்காரர் என்பதை அவர் வீட்டுத் திருமணத்திற்கு வந்திருக்கும் நண்பர்களை வைத்தே கணக்கிட்டுக் கொள்ளலாம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications