For Daily Alerts
Just In
தமிழர்-கன்னடர் ஒற்றுமை தொடர வேண்டும்: ராஜ்குமார்
முளையனூர் (ஈரோடு மாவட்டம்):
தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு தொடர என்னுடைய விடுதலை உதவும் எனராஜ்குமார் கூறினார்.
ஈரோடு அருகே தான தங்கியிருந்த த.மா.கா. பஞ்சாயத்துத் தலைவர் ராமராஜனின் வீட்டில் வியாழக்கிழமைநிருபர்களிடம் ராஜ்குமார் கூறுகையில்,
நான் கடத்தப்பட வேண்டும் என்று விதி உள்ளது. இப்போது விடுதலையானது கஷ்டத்தில் கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கர்நாடக, தமிழக மக்கள் தொடர்ந்து இனியும் சகோதரர்களாகவே வாழ வேண்டும். வீரப்பன் எனக்கு எந்தத்தொல்லையும தரவில்லை. என்னை மிக நன்றாகவே கவனித்துக் கொண்டான் என்றார்.
பேட்டியின்போது அரசுத் தூதர் நக்கீரன் கோபால் உடனிருந்தார். பேட்டியை முடித்தவுடன் அவர் உடனடியாகசிங்கம்பட்டிக்குச் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூர் வந்தடைந்தார்.
Comments
Story first published: Thursday, November 16, 2000, 5:30 [IST]