For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விளம்பரம் செய்வதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

"எல்லோ பேஜஸ் புத்தகம் போல விளம்பரப் புத்தகம் வெளியிடுவதாகக் கூறி பலரிடம் விளம்பரங்களைப் பெற்றுரூ. 4 லட்சம் மோசடி செய்ததாக கம்பெனி உதவி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.

கோவையில் பசூன் கிளாரினட் என்ற கம்பெனியைச் சேர்ந்தவர்கள் வினோத் (25). ஜெய்கணேஷ் (24). இருவரும்இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும், கோவையில் பல இடங்களில் சென்று விளம்பரம் சேகரித்துள்ளனர். இந்த விளம்பரங்களைடெலிபோன் எல்லோ பேஜஸ் புத்தகம் போல போடப் போவதாக கூறி விளம்பரங்கள் பெற்றுள்ளனர். டிசம்பர்மாதம், இந்த புத்தகம் வெளிவரும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் இதனை வெளியிட எவ்வித முயற்சியும்அவர்கள் மேற்கொள்ளவில்லை.

இது குறித்து சந்தேகம் அடைந்த கம்பெனியின் பொது மேலாளர் விஜயகுமார் கோவை குற்றப் புலனாய்வுப்போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாகஜெய்கணேஷ், மற்றும் வினோத்தைப் போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X