நார்வே தூதரகம் முன்பு சிங்களர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கைப் பிரச்சனையில் நார்வே தூதுக் குழுவினர் தலையிடக் கூடாது என்று கூறி சிங்கள வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதைத்தொடர்ந்து, நார்வே தூதரகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் நார்வே தூதுக்குழு இறங்கியுள்ளது. முதல் கட்டமாக தூதுக்குழுவினர் விடுதலைப் புலிகள் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனையும், அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் சந்தித்துப் பேசினர்.

இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே எந்த சமரச முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என சிங்கள வலதுசாரி அமைப்பினர்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிங்கள உருமாயா கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நார்வே தூதரகத்தை நோக்கிவியாழக்கிழமை இரவு ஊர்வலம் சென்றனர். தூதரகத்துக்குச் செல்லுமுன் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

நவம்பர் 1 ம் தேதி, நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை வவுனியாவில் சந்தித்துப் பேசினார். இதைஎதிர்த்து சிங்கள உருமாயா கட்சியினர், எரிக் சோல்ஹெமின் கொடும்பாவியை எரித்தனர்.

மேலும் நார்வே நாட்டினர் எப்போதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள். அவர்களால் எப்படி இலங்கையில் அமைதி ஏற்படுத்தமுடியும்?

அந்நாட்டு அரசியலமைப்பு பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும், சிறுபான்மையினர் எதிராக செயல்படும் வகையிலும் இருக்கிறது. இந்நிலையில்நார்வே எப்படி சமரச முயற்சியில் ஈடுபடமுடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

நாடாளுமன்றத்தில் 10 எம்.பி.க்களைக் கொண்ட ஜனதா விமுக்தி பெருமுனா கட்சியும் நார்வே சமரச முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+