கால்வாயில் கிடந்த ஐம்பொன் சிலை
சென்னை:
சென்னையில் கால்வாய் தோண்டும் போது ஐம்பொன் சிலை கிடைத்தது. கோவிலில்கொள்ளை அடித்த இந்த சிலையை கால்வாயில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்கொள்ளையர்கள்.
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் ஆசாத் நகரில் ஒரு கால்வாய் உள்ளது.இந்த கால்வாயை தோண்டும் பணியில் மாநகராட்சி துப்புரவுத் துறை ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கால்வாயக்குள் ஒரு சூட்கேஸ் புதைந்து கிடந்தது. அதை வெளியே எடுத்துதிறந்து பார்த்தபோது அதில் ஐம்பொன் சுவாமி சிலை இருந்தது. ஒன்றரை அடி உயரம்கொண்ட அந்த சிலை புராதனமானது.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சிலை வேணுகோபால்சுவாமி என்றும் இதன் மதிப்பு ரூ 10 கோடி என்று ஏற்கனவே போலீசில் புகார்செய்யப்பட்டிருந்தது.
அந்த சிலைகளில் ஒன்றுதான் இது என்பது தெரிந்தது. இந்த சிலைகளைகொள்ளையடித்த 15 பேர் கொண்ட கும்பல் சிலைகளை செங்கல்பட்டு குளவாய் ஏரி,பாலாறு ஆகியவற்றில் புதைத்து வைத்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுப்பணமாக்கினர்