மதுரை டி.என்.சேஷகோபாலனுக்கு விருது
டெல்லி:
தமிழக வாய்ப்பாட்டுக் கலைஞர் டி.என்.சேஷகோபாலன் உள்ளிட்ட பல தமிழககர்நாடக இசை, நாடக, நடனக் கலைஞர்களுக்கு 1999-2000மாவது ஆண்டுக்கானசங்கீத நாடக அகாதமியின் விருது கிடைத்துள்ளது.
அகாதமியின் பொதுக் குழுக் கூட்டத்தில் விருது பெற்றவர்கள் விவரம் இறுதிசெய்யப்பட்டது. அகாதமி தலைவர் பூபன் ஹசாரிகா கூட்டத்திற்குத் தலைமைவகித்தார்.
இசை, நடனம் ஆகிய பிரிவுகளில் 12 பேருக்கும், நாடக பிரிவில் 5 பேருக்கும்,பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடனம், கலை ஆகிய பிரிவுகளில் 11 பேருக்கும் விருதுவழங்கப்பட்டுள்ளது.
பாண்டிச் குவீனில் பூலான் தேவியாக நடித்த சீமா பிஸ்வாஸ், திரைப்பட இயக்குநர்நதீரா ஜாகீர் பப்பர், பிரசண்ணா ஆகியோருக்கு நாடகப் பிரிவில் விருதுகிடைத்துள்ளது.
விருது பெற்ற தமிழக கலைஞர்கள் விவரம்:
எஸ்.ஆர்.ஜானகிராமன் (கர்நாடிக்- வாய்ப்பாட்டு), டி.என்.சேஷகோபாலன் (கர்நாடிக்-வாய்ப்பாட்டு), டி.எஸ்.சங்கரன் (கர்நாடிக்- புல்லாங்குழல்), கல்யாணசுந்தரம் பிள்ளை(பரதநாட்டியம்), முத்துச்சாமி (நாடகம் -திரைக்கதை), கமலா மூர்த்தி (ஹரிகதை).
யு.என்.ஐ.