ராஜ்குமாரை நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை: பானு
பெங்களூர்:
ராஜ்குமாரை நான் நோயாளியாக நடிக்கச் சொல்லவில்லை என ராஜ்குமாருக்கு காட்டில் சிகிச்சை அளித்த டாக்டர்பானு கூறியுள்ளார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட பிரபல கன்னட நடிகர் ரர்ஜ்குமார் 108 நாட்களுக்குப் பிறகுவிடுவிக்கப்பட்டார்.
தனது விடுதலை குறித்து பெங்களூரில் பேட்டியளித்த ராஜ்குமார், தனக்கு உடல் நிலை சரியில்லை என வீரப்பனிடம்கூறும்படி டாக்டர் பானு கூறினார் எனவும், அதன் படி தான் கூறியதும் தனது விடுதலைக்கு முக்கிய காரணம்எனவும் கூறினார். ஆனால் பின்னர் அதை ராஜ்குமாரே மறுத்தார்.
சென்னையில் பேட்டியளித்த நெடுமாறன், டாக்டர் பானுவுக்கும் ராஜ்குமார் விடுதலைக்கும் எந்த விதமானசம்பந்தமும் கிடையாது, டாக்டர் பானு ராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்க கொளத்தூர் மணியால் அழைத்துவரப்பட்டவர் என கூறினார்.
ஆனால் பொது மக்களுக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இந் நிலையில் காட்டில் நடந்தது என்ன என்பதுகுறித்து டாக்டர் பானு பெங்களூரில் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் பணியைச் செய்தேன். தூதுக் குழுவினர், வீரப்பனுடன் தீவிரபேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது நான் ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்தேன்
சிறிது நேரமே பழகியிருந்தாலும் ராஜ்குமார் என் மீது தந்தைக்குரிய பாசத்துடன் பழகினார். அவர் என் மீதுகொண்ட பாசத்தினால்தான் அவர் நான் செய்த சிறு உதவியை பெரும் உதவியாக குறிப்பிட்டார். மற்றபடி எனக்கும்ராஜ்குமார் விடுதலைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications