சந்திரிகாவை அவமதித்தவர் கைது
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகாவை அவமதித்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வானொலியில் நடந்த தொலைபேசி மூலம் பேசும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சந்திரிகாவை அவமதித்துப் பேசிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த சிங்கள தொலைபேசி மூலம் பேசும் வானொலி நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் அதிபர் சந்திரிகாவின் சொந்த வாழக்கையைப்பற்றி தரக்குறைவாக பேசிய போது அவரது தொலைபேசி இனைப்பபை துண்டித்து விட்டோம் என இலங்கை வானொலி நிலைய அதிகாரிகள் கூறினர்.
தொலைபேசியில் பேசியவரை போலீசார் கைது செய்து விட்டனர். போலீசார் அந்த நபரின் பெயரை தெரிவிக்க மறுத்து விட்டனர். அவர் தலைநகர்கொழும்பின் புறநகர் பகுதியான தேஹிவாலாவில் வசிக்கிறார் என மட்டும் கூறினர்.
குற்றவாளியை கைது செய்த சினாமன் கார்டன் போலீசார், அதிபரை தரக்குறைவாக பேசியவ ர பல வழக்குகள் போட்டு தண்டிக்கலாம். ஆனால்தற்போது அவர் மீது கிரிமினல் குற்றம் மட்டும் சுமத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.