மகளிர் இடஒதுக்கீடு: பா.ம.க. ஆதரவு
கோவை:
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதனை நிறைவேற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள்கட்சியின் மாநில பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் 200 வது தொகுதி மாநாடு மற்றும் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பாராளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவினை நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது. இந்த வங்கியின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி, மக்களுக்குச் சிறந்த முறையில்சேவை செய்யும் வகையில், தற்போதுள்ள நிலையே நீடிக்கச் செய்ய வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஜி.கே மணி தலைமையில்மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ம.கா வின் உறுப்பினர் சேர்க்கை டிசம்பர் 10ம் தேதிக்குள்ளும், அமைப்புத் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
நிதி நீர்ப் பங்கீட்டில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. காவிரி கர்நாடகத்தாலும், முல்லைப் பெரியார் அணையால் கேரளாவும் தமிழகத்திற்குதண்ணீர் தர மறுத்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவும் பேபி அணையினைப் பார்வையிடவும், மத்திய அரசுத் மண்வள ஆய்வுக் குழு தமிழகம்வருகிறது. இதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைக் கவனிக்கச் சென்ற தமிழகப் பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் மற்றும் ஊழியர்கள்தாக்கப்பட்டுள்ளனர். இதனை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்திலும்,தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி அப்பாவிகள் மீது பொய் வழக்குப் போட்டுள்ள அதிகாரிகளை பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவர்களை எவ்வித நிபந்தனையும்இன்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது .












Click it and Unblock the Notifications