இலங்கையில் கடும் மழைக்கு வீடிழந்த 10,000 குடும்பங்கள்
கொழும்பு:
இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையால் 10,000குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால்இலங்கையின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக இலங்கையின் கிழக்குப் பகுதி மிகவும்பாதிக்கப்பட்டுள்ளது. 10,000 குடும்பங்கள் வீடிழந்து தவிக்கின்றன. பல ஏக்கர்நிலங்களில் உள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாகி விட்டன.
இதுபற்றி அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலனருவா மாவட்டங்கள்தான்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கல்முனையையும், பொல்லுவில்லையும்இணைக்கும் நெடுஞ்சாலை முழுவதும் மழைநீரில் மூழ்கி உள்ளது.
மட்டக்களப்பில் மட்டும் 5000 குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 25,000 மக்கள் பள்ளிகளிலும், பொதுகட்டடங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications