கவிஞர் வாலிக்கு பாரதி விருது
சென்னை:
கவிஞர் வாலிக்கு தமிழக அரசால் பாரதி விருது வழங்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருப்பவர் கவிஞர் வாலி. இவர் பலராலும் அன்புடன் இளமை கவிஞர் என அழைக்கப்படுகிறார். இவருக்கு தமிழகஅரசால் பாரதி விருது வழங்கப்படுகிறது. இது பற்றி தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பெரியார் விருது, அம்பேத்கார் விருது, திரு.வி.க. விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது ஆகியவைவழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றுடன் சென்ற மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கி.ஆ.பெ. விருது உள்ளிட்ட 6 விருதுகளும் 2000 ஆண்டுக்குப் பின் வருபவர்களுக்கு வழங்கப்படுமஎன முதல்வர் அறிவித்திருந்தார்.
இதன்படி திருச்சி செல்வேந்திரனுக்கு பெரியார் விருதும், முன்னாள் அமைச்சர் ராஜாங்கத்துக்கு அம்பேத்கார் விருதும், யாழ்ப்பாணம் சிவத்தம்பிக்கு திரு.வி.க.விருதும் வழங்கப்படுகிறது.
கவிஞர் வாலிக்கு பாரதி விருதும், பாவர் மணிவேலுக்கு பாரதிதாசன் விருது, முத்துப் பிள்ளைக்கு கி.ஆ.பெ. விருதும் வழங்கப்படும் என அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ள
டிசம்பர் மாதம் 24-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில் இவர்களுக்கு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும், ஒரு சவரன்தங்கப்பதக்கமும், தகுதி உரையும் வழங்கப்பபடும்












Click it and Unblock the Notifications