For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எலக்ட்ரானிக்ஸ் படிக்க அலைமோதும் மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

தமிழக என்ஜீனியரிங் கல்லூரிகளில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்புப்பிரிவுக்குத்தான் மாணவர்கள் அதிக அளவில் சேருகின்றனர் என்று தொழில்கல்விஇயக்குநர் ஏ.ஞானம் கூறியுள்ளார்.

திருச்சியில் திங்கள் கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழத்தில் 2000-2001வது கல்வி ஆண்டில் என்ஜீனியரிங் கல்லூரிகளைத் துவக்க 73பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை இதுவரை பரிசீலிக்கவில்லை.அரசின் ஆணைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

தற்போது தமிழகத்தில் 153 தொழில் நுடப் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 143கல்லூரிகள் சுய நிதி கல்லூரிகள். இந்த வருடம் மொத்தம் 43,000 இடங்கள்மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. இவற்றில் 41,000 இடங்கள் நிரப்பப்பட்டன.

என்ஜீனியரிங் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் மிண்ணனு தகவல்தொடர்புப் பிரிவுக்குத்தான் மாணவர்களிடையே அதிக மோகம் உள்ளது. இதையடுத்துதகவல் தொழில் நுட்பப் பிரிவில் கூடுதலாக 6,000 மாணவர் இடங்கள்சேர்க்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அரசு கல்லூரிகளின் தரத்தை கருத்தில் கொண்டு அங்கு மாணவர்இடங்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படவில்லை என்றார் ஞானம்.

பின்னர் தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியொன்றில் ஞானம் பேசுகையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், சுய நிதிக் கல்லூரிகளை, சிறந்த அடிப்படைக் கட்டமைப்புவசதிகளை கொண்டவை, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்தமுயற்சிக்கும் கல்லூரிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கானமுயற்சியை எடுக்காகத கல்லூரிகள் என மூன்றாக பிரித்துள்ளோம்.

எல்லா கல்லூரிகளும் எல்லா வசதிகளையும் பெற செய்வதற்கான முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது என கூறினார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X