For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டு கட்டுரையை காப்பி அடித்த பேராசிரியர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெளிநாட்டை சேர்ந்தவருடைய கட்டுரையை காப்பியடித்து எழுதிய மதுரைபல்கலைக்கழக பேராசிரியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதம்விதித்துள்ளது.

கடந்த 1976ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ராமமூர்த்தி என்பவர்விரிவுரையாளராக சேர்ந்தார். 1985ம் ஆண்டு இவர் ரீடராக பதவி உயர்வு பெற்றார்.

அலிகாரிலிருந்து வெளிவரும் ஆய்வு தொடர்பான பத்திரிகையில் ஷேக்ஸ்பியர் பற்றி1987ம் ஆண்டு இவர் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

இதை அறிந்த அகில இந்திய பல்கலைக்கழக சங்கம், மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் கனடா நாட்டைச் சேர்ந்தபேராசிரியர் டபிள்யூ.பி.தார்ன் எழுதிய கட்டுரையை அப்படியே காப்பியடித்துராமமூர்த்தி எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இதுபற்றி பல்கலைக்கழக சிண்டிகேட் விசாரித்தது. இதையடுத்து 6 ஆண்டுகள்விரிவுரையாளராக பதவியிறக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில், ராமமூர்த்தியின்இத்தகைய செயலால் சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்திற்கும், நாட்டிற்கும் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நபர்களுக்கு கருணை காட்டினால் சர்வ தேச அளவில் நமது நாட்டிற்குகெட்ட பெயர் ஏற்பட்டு விடும். எனவே இவரை பதவியிறக்கம் செய்து சிண்டிகேட்பிறப்பித்த உத்தரவு செல்லும். வழக்கு செலவான ரூ. 1000த்தை மதுரைபல்கலைக்கழகத்திற்கு ராமமூர்த்தி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X