பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார் நெடுமாறன்
சென்னை:
பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் நெடுமாறன். மக்கள் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழகபாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாயின் நல்லாட்சிக்கு ஆதரவு தரக்கோரி பாஜக சார்பில் தாமரை ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.சென்னையில் இந்த ரதயாத்திரை பல்வேறு பகுதிகளில் நடந்தது. பா.ஜ.க. சார்பில் ரதயாத்திரைக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:
ரத யாத்திரை எதிர்பார்த்ததை விட வெற்றி அடைந்துள்ளது. வாஜ்பாய் சாதனைகள் குறித்தும், அவருக்குதொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றும் மக்களை கேட்டு வருகிறோம்.
தேர்தலில் சாதி பார்த்து வாக்களிக்காமல், மத்தியில் உறுதியான அரசு நீடிக்க வேண்டும் என்று மக்களிடம்வலியுறுத்தி வருகிறோம். இந்து கோவில்களை தெய்வ நம்பிக்கை உள்ள தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும்.
கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரம் வெற்றிகரமாக கையாளப்பட்டு விட்டதில் மகிழ்ச்சி. ஆனால், வீரப்பனைதேடக் கூடாது என்று நெடுமாறன் கூறுவது சரியல்ல. பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அவர் பேசிவருகிறார். எனவே அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications