For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். ஆட்சிக்கு தியாகிகள் ஏங்குகின்றனர்.. இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வயதான நிலையில் உள்ள தியாகிகள் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலராதா என்று ஏங்கிகொண்டிருக்கின்றனர். அவர்களது ஆசையை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்று காங்கிரசார் மத்தியில்தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.

சென்னையில் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் சார்பில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இளங்கோவன்பேசியதாவது:

நல்ல விஷயத்திற்கு காலம் கடத்தக் கூடாது. இப்போது வயதாகிய நிலையில், காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலருமாஎன்று காத்திருக்கும் தியாகிகளுக்கு காங்கிரஸ் ஆட்சியை காட்ட வேண்டியது நமது கடமை.

மூன்றாவது அணி குறித்த கேள்வி இப்போது எழுந்துள்ளது. எனது கருத்தெல்லாம் எந்த விதத்திலாவதுதமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்பதுதான்.

அதற்காக கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. கூட்டணி தேவை தான். ஆனால், அந்த கூட்டணியில்காங்கிரஸ் பலமாக இருக்க வேண்டும். அப்படி பலமாக இருந்தால் தான் கட்சிக்கும் நல்லது, கூட்டணிக்கும் நல்லது.அதற்கு நாம் தயாராக வேண்டும். கூட்டணி கட்சிகள் பயப்படும் அளவுக்கும் நாம் பலம் பெற வேண்டும் என்றார்இளங்கோவன்.

மாநாட்டிற்கு வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X