மிதுன் சக்ரவர்த்தியைக் கடத்த திட்டமா?
ஊட்டி:
ஊட்டிக்கு அருகே தங்கியிருக்கும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் ஹோட்டலைசில மர்ம மனிதர்கள் உளவு பார்த்தனர். அவர்கள் வீரப்பனின் ஆட்களாக இருக்கலாம்என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதுபொக்காபுரம் என்ற இடம். அங்கு இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு சொந்தமானஹோட்டல் உள்ளது.
மிதுன் சக்கரவர்த்தி ஊட்டிக்கு வரும் போதெல்லாம் இந்த ஹோட்டலில்தான்தங்குவார். ஊட்டிக்கு வரும் பல முக்கியப் பிரமுகர்களும், பிரபல நடிகர்களும் இங்குதங்கி ஓய்வெடுப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் 5 பேர் இந்த ஹோட்டலுக்கு வந்து வேவு பார்க்கும்விதமாக நின்று கொண்டிருந்தனர், இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல்ஊழியர்கள் அவர்களை விசாரிக்கவும் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேவு பார்த்தவர்கள்வீரப்பன் ஆட்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நடிகர்கள் யாரையாவது கடத்த திட்டமிட்டு அவர்கள் வந்திருக்கலாம் என்றசந்தேகமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications