2 மனைவிக்காரர் ரயில் முன் குதித்துத் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்ட கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அருகே கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்து (40). இவருக்கு இரண்டு மனைவிகள்.
முதல் மனைவி தங்கத்திற்கு குழந்தைகள் இல்லை. இதனால் மங்கம்மாள் என்ற பெண்ணை இரண்டாவதுதிருமணம் செய்து கொண்டார் முத்து.
இரண்டாவது திருமணம் செய்த நாளில் இருந்த முத்துவுக்கு அவஸ்தை ஆரம்பமானது. சாதாரண கூலி வேலைபார்த்து வந்த முத்துவால் இரண்டு குடும்பம் நடத்த முடியவில்லை.ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்க மனைவிகள்முன்வரவில்லை.
இதனால் தினமும் சண்டையும் சச்சரவுமாக வாழ்க்கையை கழித்த முத்து, மனைவிகள் தொல்லையால்கடனாளியானார். மனடைந்த முத்து காட்டாங்குளத்தூர் பொத்தேரிக்கு அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோதுகுறுக்கே பாய்ந்தார். அதே இடத்தில் அவர் உடல் சிதறி இறந்தார்.












Click it and Unblock the Notifications