அமெரிக்கா: நிராகரிக்கப்பட்ட ராணுவ ஓட்டுக்களை பரிசீலனை செய்ய கோரிக்கை
டல்ஹெளசி:
வெளிநாடுகளில் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் அனுப்பிய தபால் ஓட்டுக்களில், தொழில்நுட்ப காரணங்களுக்காகநிராகரிக்கப்பட்ட ஓட்டுக்களை ஏற்றுக் கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று புளோரிடா வழக்கறிஞர் ராபர்ட் பட்டர்வர்த்வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள ராணுவ வீரர்களில் பெரும்பாலானவர்கள், ஜார்ஜ் புஷ்ஷிற்கே வாக்களித்திருப்பார்க் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தபால்ஓட்டுக்களில் 1000-க்கும் மேற்பட்ட வாக்குகள், சரியான முத்திரை இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், வெளிநாடுகளில் சேவையாற்றி வரும் ராணுவ வீரர்களின் ஓட்டுக்களை, சரியான முத்திரை இல்லை என்று காரணம் கூறி நிராகரித்திருப்பதுதவறு என்று ஜார்ஜ் புஷ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுவரை எண்ணப்பட்டுள்ள புளோரிடா வாக்குகளில் லேசான முன்னிலையில், புஷ், முன்னணியில் இருக்கிறார். இந்த மாநிலத்தில் 25 எலக்டோரல்வாக்குகள் உள்ளன. இவற்றை பெறும் வேட்பாளரே அடுத்த அதிபர் என்ற நிலை நிலவுவதால், இங்கு ஓட்டு எண்ணிக்கையில் பெரும் குழப்பம்நிலவுகிறது.
பட்டவர்த் தொடர்ந்து கூறுகையில், ராணுவத்தில் பணியாற்றும் ஆண் அல்லது பெண்ணின் ஓட்டுக்களை சரியான முத்திரை இல்லை என்று க்கி எறியவோஅல்லது ஓட்டுப் போடாதவர்கள் பட்டியலில் சேர்க்கவோ கூடாது. அமெரிக்க வீரர்கள், வீராங்கனைகள் பயங்கரமான போர்க்களத்தில்இருக்கிறார்கள். அங்கிருந்து ஓட்டுக்களை அனுப்பும்போது, பல சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.