திருச்சி பெண் சாமியார் ஐகோர்ட்டில் அப்பீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி, கே.கே.நகர் பகுதியிலுள்ள ஆசிரமத்தில் ஆசிரியை லீலாவதி கொலை செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ரத்துசெய்யக் கோரி பெண் சாமியார் ஜெயந்தி மாதா உள்பட 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர்.

கே.கே.நகர். கிம்பர் கார்டன் பகுதியில் ஸ்ரீதேவி ஆசிரமம் என்ற பெயரில் பெண் சாமியார் ஜெயந்தி ஆசிரமம் நடத்தி வந்தார். சிறுவயதில் இறந்து போனதனது மகள் ஸ்ரீதேவியின் நினைவாக அவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வந்தார். திருச்சி அருகே ஓலையூர் கிராமத்தில் ஸ்ரீதேவிக்கு கோவிலும் கட்டி பூஜைகள்நடத்தி வந்தார்.

பெண் சாமியார் ஜெயந்தி, கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதே போல் மனைவியைப் பிரிந்த ஸ்ரீபுத்திரா என்பவர் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்துநிர்வாகியாகப் பணிபுரிந்து வந்தார்.

ஜெயந்தியின் மகள் ஸ்ரீதேவி உயிருடன் இருந்த போது, அவருக்கு ஆசிரியராக இருந்த லீலாவதி, ஸ்ரீதேவி இறந்த பின் ஆசிரமத்தில் கணக்கராக இருந்து கணக்கு,வழக்குகளைக் கவனித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 8 ம் தேதி ஆசிரியர் லீலாவதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். யாருக்கும் தெரியாத வகையில் அவரதுபிணம் எரிக்கப்பட்டது. இதையடுத்துப் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

அப்போது, பெண் சாமியார் ஜெயந்திக்கும், ஸ்ரீபுத்திராவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், ஆசிரமச் சொத்துக்களைத் தனக்குத் தராவிட்டால் வெளியில்இதை அம்பலப் படுத்துவேன் என்று லீலாவதி மிரட்டல் விடுத்ததால் அவரைக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக ஜெயந்தி உள்பட 12 பேரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 14 ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி முனிரத்தினம் வழக்கில் தொடர்புடைய பெண் சாமியார் ஜெயந்தி, ஆசிரம நிர்வாகி ஸ்ரீபுத்திரா, ஸ்ரீபுத்திராவின் மகன் சத்யநாராயணா ஸ்ரீபுத்திரா, பெண் சாமியார்மகன் சத்யநாராயணா, என்ஜினியர் தினகரன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

ஆசிரமக் காவலாளி கருப்பைய்யாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 6 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பெண் சாமியார் ஜெயந்தி உள்பட 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர்.இதேபோல் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற காவலாளி கருப்பையாவும் அப்பீல் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+