ஈரான்-இந்தியா இடையே கடலுக்கடியில் காஸ் குழாய் இணைப்பு
டெல்லி:
ஈரானிலிருந்து இந்தியாவுக்கு இயற்கை வாயுவை ( எரிவாயு) குழாய் மூலம் கொண்டுவரும் முயற்சியில் புதிய யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் அமைக்கலாம்என ஈரான் கூறிவந்தது. ஆனால், பாகிஸ்தான் வழியாக குழாய் அமைக்க இந்தியாவிரும்பவில்லை.
இதையடுத்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழியாக தரைவழி குழாய் அமைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டுகடலுக்கு அடியில் குழாய் அமைத்து அதன் மூலம் இயற்கை வாயுவை அனுப்புவதுஎன ஈரான் திட்டமிட்டுள்ளது.
இத் திட்டம் சாத்தியமா என இந்தியாவும் ஈரானும் ஆராய உள்ளன. இது குறித்து இருநாட்டு அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்ட விவரம் குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்தெரிவிக்கையில் ,
கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் ராஜன்தலைமை தாங்கினார். ஈரான் சார்பில் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அடேலிதலைமை தாங்கினார். இந்த திட்டம் குறித்து இரண்டாவது கட்ட கூட்டம் அடுத்தஆண்டு நடக்கும்.
இந்தக் கூட்டத்தில் கடலின் கீழ் குழாய் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய ஆலோசகர்ஒருவரை நியமிப்பது எனவும், எந்த விதமாக குழாய் அமைப்பது என்பது குறித்தும்ஆலோசனை செய்யப்பட்டது.
இதற்கு ஆகும் செலவை இரு நாடுகளும் பகிரந்து கொள்ளும். இந்த திட்டத்தைசெயல்படுத்த 9 மாதம் முதல் 12 மாத கால அவகாசம் தேவைப்படும். இந்தத்திட்டத்தில் இரு நாடுகளும் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புசம்பந்தமான அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.