வீரப்பன் பிரச்சனை: கருணாநிதி-ஜெ. மோதல் தொடர்கிறது
சென்னை:
கற்பனையாகச் செய்திகளை வெளியிடாமல் சிலர் சுயக் கட்டுப்பாடு விதித்துக் கொண்டால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் வெற்றி கிட்டும் என்று தமிழகமுதல்வர் கருணாநிதி கூறினர்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பேட்டி:
கேள்வி: ராஜ்குமார் மீட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று ஜெயலலிதா கேட்டுள்ளாரே?
பதில்: சி.பி.ஐ. என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா என்று ஆட்சியிலிருந்தபோது ஜெயலலிதா கேட்டார். இப்போது அவரே தான் சி.பி.ஐ. விசாரணைவேண்டுமென்கிறார். அவர் மீது நடைபெறுகிற சி.பி.ஐ. விசாரணைகள் முதலில் முடியட்டும்.
கேள்வி: ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளாரே?
பதில்: ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது வீரப்பனால் நான்கு முறை கடத்தல் நடைபெற்றதே, அதில் எத்தனை சம்பவங்களுக்கு அவர் வெள்ளை அறிக்கைவைத்தார் என்ற ஒரு கேள்வியை மட்டும் அவரிடம் கேளுங்கள்.
கேள்வி: தூதுக் குழுவில் இடம் பெற்ற கொளத்தூர் மணியை கட்சியை விட்டு நீக்கியதில் இருந்து தி.க. தலைவர் வீரமணி விடுதலைப்புலி ஆதரவாளர்அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று த.மா.கா. நிர்வாகி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் கூறியுள்ளாரே?
பதில்: பிரபாகரன் தமிழ் சமுதாயத் தலைவர் மட்டுமல்ல; என்னுடைய இளைய சகோதரன் என்று பேசியவர் வீரமணி. அவரை புலி ஆதரவாளர் அல்ல என்றுஎஸ்.ஆர்.பி. கூறியது விந்தை தான். மேலும் கொளத்தூர் மணியை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதற்காக கட்சியிலிருந்து நீக்கவில்லை.
நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படமாட்டார், அதை வைத்தே தேர்தல் வரை பிரச்சாரம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதாவின் எண்ணத்தைக்குலைக்கும் வகையில் ராஜ்குமார் விடுவிப்பதற்கு கொளத்தூர் மணியும் காரணமாக இருந்து விட்டார்.
அவர் தன் கட்சியை சேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது தான் உண்மையில் கொளத்தூர் மணியை வீரமணி கட்சியிலிருந்துநீக்கியதற்கு காரணம். அதை சரியாகத் தெரிந்து கொள்ளாமல் எஸ்.ஆர்.பி. இப்படி கூறியிருக்கிறார்.
கேள்வி: தேசிய மனித உரிமைக் கமிஷன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதாக குறிப்பிட்டிருப்பது பற்றி?
பதில்: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சிக்கு தேசிய மனித உரிமைக் கமிஷன் வழங்கிய நற்சான்றிதழ் அது என்றார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications