தமிழகத்தில் 3 கோடி பேருக்கு அடையாள அட்டை
திருச்சி:
தமிழகத்தில் உள்ள 4.8 கோடி வாக்காளர்களில் இது வரை 3 கோடி வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டதாக மாநில தேர்தல் அதிகாரி மிருதுசஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.
திருச்சியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை பார்வையிட மாநில தேர்தல் அதிகாரி சாரங்கி வெள்ளிக்கிழமையன்று திருச்சிக்கு வந்திருந்தார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் மொத்தம் 4.8 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் இது வரை 3 கோடிவாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இறந்து போனவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் கூறியிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கும் 55 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில் 70 ஆயிரம் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. வாக்காளர் புகைப்படம்எடுக்கும் மையங்களுக்குள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications