காஷ்மீரில் 5 இந்துக்கள் சுட்டுக்கொலை
ஜம்மு:
காஷ்மீரில் இந்துக்கள் 5 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று வெள்ளிக்கிழமை படுகொலை செய்துள்ளனர்.
காஷ்மீரில் ரம்ஜான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இந்திய ராணுவம் வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று சமீபத்தில் பிரதமர்வாஜ்பாய் கூறினார்.
இருப்பினும், காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை இந்துக்கள் 5 பேரைக் கடத்திச் சென்றுகொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
கிஸ்த்வார் அருகே தாச்சன் என்ற இடத்திலுள்ள பஸ் நிலையத்தில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தினக்கூலி செய்பவர்கள்.வெள்ளிக்கிழமை பிற்பகல் லஸ்கார்- ஈ- தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் இவர்கள் ஐந்து பேரையும் கடத்திச் சென்றனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும், தீவிரவாதிகள் பக்கத்திலுள்ள காட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் அனைவரையும் நிற்க வைத்துகுருவியைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றனர்.
சம்பவம் தெரிந்ததும் போலீஸார் அங்கு விரைந்து சென்று 5 பேரின் பிணங்களையும் கைப்பற்றினர். இறந்தவர்கள் பெயர்கள் பூஷன்குமார், சந்தோஷ்குமார், அசோக், ரமேஷ், ரோஷன்லால் எனத் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய தீவிரவாதிகளைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
முதல்வர் கண்டனம்:
இச்சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.