ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டார் மாறன்
சென்னை:
இருதய நோய் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ந மத்தியஅமைசச்ர் முரசொலி மாறன் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஒற்றைத் தலைவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்மத்திய தொழில் துறை அமைச்சர் முரசொலி மாறன். அவருக்கு இருதயத்தில் கோளாறுஏற்பட்டு, மூச்சுத் திணறலும் ஏற்பட்டு அவதிப்பட்டார்.
அதைத் தொடரந்து அவருக்கு பேஸ் கருவி தற்காலிகமாக பொருத்தப்பட்டது. அந்த கருவிபழுதடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு நிரந்தர பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டது. மூச்சுத்திணறல் இருந்த காரணத்தால் வெண்டிலேட்டரும் வைக்கப்பட்டது.
லண்டனில் இருந்து மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சையும்அளிக்கப்பட்டது. கடந்த வாரம் அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுவெண்டிலேட்டர் வைக்கப்பட்டது.
மாறனின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதன்காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஸ்பெஷல் வார்டுக்கு மாறன்மாற்றபப்ட்டுள்ளார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் திருப்தி தெரிவித்தனர். மாறன் உடல் நிலைநன்கு தேற் வருவதால் அவர்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.
மேலும் இரண்டு வாரங்கள் ஸ்பெஷல் வார்டில் இருந்து மாறன் சிகிச்சை பெறுவார் எனமருத்துவர்கள் தெரிவித்தனர்.