டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 306 ரன் குவிப்பு
நாக்பூர்:
நாக்பூரில் இந்தியாவிற்கும், ஜிம்பாவேவிற்குமான இரண்டாவது இறுதி கிரிக்கெட் போட்டி சனிக்கிழமையன்று துவங்கியது.
டாசில் ஜெயித்த இந்திய அணித் தலைவர் கங்குலி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். துவக்க ஆட்டக்காரர்களாக சிவ சுந்தர்தாசும், சடகோபன் ரமேஷும் களம் இறங்கினர்.இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 92 ஆக இருந்த போதுசடகோபன் ரன் அவுட் ஆனார். அவர் 48 ரன்கள் எடுத்தார்,
இதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட் களமிறங்கினார். அவர் ஆட்ட நேர முடிவில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்இருக்கிறார். இவர் முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ராகுல் டிாரவிடும் தாசும் இணைந்து ஆடி அணிக்கு மேலும் பலம் சேர்த்தனர். தாஸ் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைஎடுத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவர் 110 ரன்கள் எடுத்திருந்த போது மர்பி வீசிய பந்துக்கு காம்ப்பெல்லிடம் காட்ச்கொடுத்து ஆட்டமிழந்தார். அபபோது அணியின் ஸ்கோர் 227 ஆகும்.
அதன் சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிடுடன் ஜோடி சேரந்தார். இவர் ஆட்ட நேர இறுதியில் 48 ரன்கள் எடுத்துஆட்டமிழக்காமல் இருக்கிறார். இவர் முதல் டெஸ்டில், முதல் இன்னிங்சில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளின் ஆட்ட நேர இறுதியில் இந்தியா இரண்டு விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுதிதருந்தது.












Click it and Unblock the Notifications