ராஜ்குமாரின் வன வாச அனுபவம் புத்தகமாகிறது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சந்தன மரக் கடத்தல் வீரப்பனிடம் 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்து விடுதலையான கன்னட நடிகர் ராஜ்குமார் தனதுகாட்டு வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதவிருக்கிறார்.

வீரப்பனிடம் 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்து விட்டு விடுதலையான கன்னட நடிகர் ராஜ்குமார் தன் அனுபவம் பற்றியாரிடமும் இதுவரை எதுவும் விவரமாக கூறவில்லை.

இதற்கிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சந்திரசேகர் கூறுகையில், அவரது காட்டு அனுபவங்களை அவர்புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் இதை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம்.

1934-ம் ஆண்டு முதல் கன்னட திரைப்படங்கள் தயாரிக்கபட்டு வருகின்றன. ஆனால் கன்னட திரைப்படத்துறை பற்றி இதுவரைஎந்த புத்தகமும் வெளிவரவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரியில் பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கும் போது இருதொகுதிகளாக கன்னட திரைப்பட துறை குறித்து புத்தகம் வெளியிடப்படும். இதை வாங்குபவர்களுக்கு ராஜ்குமாரின் வன வாசம்குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்படும்

சர்வதேச திரைப்பட விழா நடக்கும் போது இந்த புத்தகம் வெளியிடப்படுவது பொருத்தமாக இருக்கும். இந்த புத்தகங்கள்கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் என்றார்.

ராஜ்குமார் தனது காட்டு வாழ்க்கை அனுபவங்கள் மூலம் சிறந்த திரைக்கதை அமைக்க முடியும் என கூறியிருந்தார். அவர் இதுகுறித்து டிவிக்கு பேட்டியளிப்பது குறித்தும் யோசித்து வருகிறார்.

வீரப்பனை திருத்திய ராஜ்குமார் என்ற பெயரில் 60 பக்கம் கொண்ட புத்தகம் ஏற்கனவே வெளியாகியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+