For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாக்கா தீவிபத்தில் 37 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

டாக்கா:

வங்கதேச தலைநகர் டாக்காவில், துணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர்கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

தீயணைப்பு வீரர்கள் தீ பிடித்த இடத்தை அடைவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. தீயை அணைக்க இரண்டு மணிநேரம் ஆனது என்றனர். சம்பவ இடத்திற்கு அருகே கூடியிருந்த மக்கள் உதவ நினைத்தாலும் தீயின் வெப்பத்தால்எதுவும் செய்ய முடியவில்லை. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

250 பேருக்கும் அதிகமானவர்கள் அங்கு பணி புரிந்து வந்தனர். போலீசாரும்,பத்திரிக்கைகளும் இறந்தவர்கள் எண்ணிக்கையை 40 என்று குறிப்பிட்டாலும் அதுமேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் துண்டுகளே தயாரிக்கப்படுகிறது. இவைஅமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

1998-ம் ஆண்லிருந்து துணிகள் தயாரிக்கு ம் தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 200 பேர்இறந்துள்ளனர். இதற்கு அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறையே காரணமாகும்.

சில சமயம் தீ விபத்து ஏற்பட்டால் தப்பித்து செல்வதற்காக உள்ள கதவுகள் கூட மூடப்பட்டிருக்கும்.

சுமார் 3,000 துணி தயாரிக்கும் நிறுவனங்கள் வங்க தேசத்தில் இயங்கி வருகின்றன.இவற்றில் 20 லட்சம் பணியாளர்கள் பணி புரிகின்றனர். இவற்றில் 90 சதவிகிதம் பேர்பெண்கள்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X