For Daily Alerts
Just In
கொல்லம் சாராய சாவு: முக்கிய குற்றவாளி நாகர்கோவிலில் கைது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லத்தில் விஷச் சாராயத்திற்கு 40 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய முக்கியகுற்றவாளியான மணிச்சன் என்பவர், நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கள்ளச் சாராயத்திற்குப் பயன்படும் ஸ்பிரிட்டை இந்த மணிச்சன்தான் விற்பனை செய்தார் என்று போலீஸார்தெரிவித்துள்ளனர். சாராய சாவு சம்பவம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் போலீஸ் படை, மணிச்சனைக்கைது செய்தது.
மணிச்சனுக்கு பல அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பு இருப்பதாகவும், அக்டோபர் 20-ம் தேதி கொல்லத்தில்நடந்த சாராய சாவுக்குப் பிறகு தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
Comments
Story first published: Sunday, November 26, 2000, 5:30 [IST]