For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை வருகிறது கமாண்டோ படை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் தனி கமாண்டோ படை கோவை வழியாக ஈரோடு செல்லவிருக்கின்றனர். இது குறித்ததகவல்கள் கோவை போலீசாருக்கு வந்துள்ளது.

சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி காட்டுப் பகுதியில் அதிரடிப்படை வீரர்கள் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இருந்தாலும் இவர்களிடம் போதுமான நவீன ரக ஆயுதங்களோ, நவீனக் கருவிகளோ இல்லை.

இந்த நிலையில், மத்திய அரசின் உதவி கோரி கர்நாடக மாநில முதல்வர் கிருஷ்ணா டெல்லி சென்று மத்திய அமைச்சர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ், அத்வானி ஆகியோரைச் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் வீரப்பனைப் பிடிக்க மத்திய கமாண்டோபடையினை அனுப்பி வைக்க அரசு முடிவு செய்தது.

இதையடுத்து மத்திய அரசிடமிருந்து கோவை போலீசுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதில், கமாண்டோ வீரர்கள் நவீனஆயுதங்களுடன், கோவை சூலூர் விமான நிலையத்திற்கு வருவதாகவும், அவர்களை வரவேற்று, பலத்த பாதுகாப்புடன், ஈரோடுவனப் பகுதியில் சென்று விட்டு விடுமாறும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, கமாண்டோ வீரர்களை வரவேற்க கோவை காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த வீரர்கள், ஈரோடு சென்றுஅங்கிருந்து பண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளுக்குச் செல்லவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X