கோவையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் கழிவுத் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற மூன்று பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர்.
கோவை காளப்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் கழிவு நீர்த் தொட்டி இருந்தது. இந்த கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய மூன்று பேர்சென்றனர்.
இந்த தொட்டியை முதலில் ஏரிமேடு அம்மன் குளத்தைச் சேர்ந்த காளியப்பன் (42) பார்வையிட்டார். அப்போது அவர் மயங்கி தொட்டிக்குள் திடீரெனவிழுந்தார். இதனால் உடன் வந்திருந்த பொரிக்கடை வீதியைச் சேர்ந்த உதயன் (19), பண்ணாரி (25) ஆகியோர் காளியப்பனைக் காப்பாற்றத் தொட்டிக்குள்இறங்கினர்.
இவர்களையும் விஷ வாயு தாக்கியது. இதனால் இருவரும் மயக்கமடைந்தனர். இவர்கள் மூவரையும் அரசு மருத்துவ மனைக்குச் சென்றனர். ஆனால்வரும் வழியிலேயே மூவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications