பிரபாகரனுக்காக அர்ச்சனை செய்ய முயன்றவர் கைது
விருதுநகர்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்பிரபாகரன் பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்யமுயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பிரபாகரனின் 46-வது பிறந்த நாள், ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.தமிழகத்திலும் ஆங்காங்கே பிறந்தநாள் கொண்டாட்டங்கள், காணப்பட்டன.
தமிழகத்தின் தென்பகுதி நகரான விருதுநகரில், தமிழர் தேசிய இயக்க மாநில செயற்குழுஉறுப்பினர் சோமு என்பவர், வத்திராயிருப்பு பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும்பிரபாகரன் பெயரில் அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தத் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலைமுத்தாலம்மன் கோவிலில் பூஜை செய்ய பழம், தேங்காய் மற்றும் பூஜைக்கானபொருட்களுடன் சோமுவும், இன்னும் சிலரும் சென்றனர். அப்போது போலீஸார்விரைந்து வந்து அவர்களைக் கைது செய்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications