கொளத்தூர் மணி கைதாவாரா?
கோவை:
கொளத்தூரில் நடந்த மனித உரிமைகக் கமிஷன் கண்டன மாநாட்டில் வீரப்பனிடம் தூதராக சென்ற கொளத்தூர்மணி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் கடைசி நேரத்தில் சேர்ந்த சில தூதர்களில் கொளத்தூர் மணியும் ஒருவர். காட்டுக்குச்செல்வதற்கு முன்பு திராவிடர் கழகத்தில் இருந்தவர். காட்டுக்குப் போய் விட்டு வந்த பின் அவர் தி.கவிலிருந்துவிலகி விட்டார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, கொளத்தூர் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு முகாம் அமைக்கஉதவியவர். பிரபாகரனுடன் நல்ல நட்பு கொண்டவர். இந்த நிலையில், கொளத்தூரில், தேசிய மனித உரிமைக்கமிஷனைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடந்தது. இதில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும்வீரப்பனின் தம்பி அர்ஜூனன் மனைவி, அர்ஜூனனின் மகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கொளத்தூர் மணி மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இணைந்து இருந்த படங்கள்விற்பனை செய்யப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் மற்றும் பிரசுரங்கள் விற்பனைசெய்யப்பட்டன.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் இந்த மாநாடு நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கொளத்தூர் மணியைப் போலீசார் கைது செய்யலாம், என்ற சூழ்நிலை நிலவியது. போலீசாரைஅங்கிருந்து போய் விடுமாறு மாநாட்டு அரங்கில், மைக்கில் பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.மாநாட்டு அரங்கில் உள்ள உளவுப் பிரிவு போலீசாரையும் வெளியேறுமாறு கொளத்தூர் மணி மைக்கிலேயேவேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications